நாம் தமிழர் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்தை, அகற்றியதால் பரபரப்பு

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்தை, அகற்றியதால் பரபரப்பு

சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசனின் 159-வது பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நாம் தமிழர் கட்சியினர் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இரட்டைமலை சீனுவாசன் படத்தை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறு கூறினர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும். போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதையடுத்து அங்கிருந்து இரட்டை மலை சீனிவாசன் உருவப்படம் அகற்றப்பட்டு பின்னர் வேறு இடத்தில் வைக்க முடிவு செய்த போது, எந்த இடத்திலும் உருவ படத்தை வைக்கக்கூடாது என போலீசார் கூறியதோடு, முன் அனுமதி பெறாததால் பொது இடங்களில் படம் வைத்து மரியாதை செய்ய அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.


User: Sathiyam TV

Views: 1

Uploaded: 2018-07-17

Duration: 01:14

Your Page Title