நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன்- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2017-12-15

6 Views

01:24

நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொம்பேரிபட்டியை சேர்ந்தவன் ராஜ்குமார். இவன் பல்வேறு கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியே வந்துள்ளான். இவனரது உறவினர் குழந்தையான மகாலெட்சுமி என்னும் நான்கு வயது சிறுமியை குழந்தையின் பாட்டி ராஜ்குமாரிடம் அருகில் உள்ள அங்கன் வாடியில் விட்டு விடும் படி கூறியுள்ளார். ஆனால் காமக்கொடூரன் ராஜ்குமார் குழந்தையை அங்கன் வாடியில் விடாமல் கிணத்துப்பட்டி அருகே உள்ள மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்துள்ளான். குழந்தையை காண வில்லை என்று பெற்றோர்களும் உறவினர்களும் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் ராஜ்குமாரை பிடித்த குழந்தையின் பெற்றோர்களும் உறவினர்களும் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளான். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் விரைந்து வந்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ராஜ்குமார் ஒப்புக்கொண்டுள்ளான். மேலும் காவல்துறையினரை அழைத்துக்கொண்டு குழந்தையை கொலை செய்த கிணத்துப்பட்டி மலைப்பகுதிக்கும் அழைத்து சென்று காண்பித்துள்ளான். அங்கு குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றினர். குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ராஜ்குமாருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மகாலெட்சுமியின் உறவினர்கள் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

Trending Videos - 10 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 10, 2024