ரோகித் சர்மா, விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி

By : Sathiyam TV

Published On: 2018-07-17

1 Views

01:12

இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார். களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 268 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆடினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். ஒருபுறம் ரோகித் சர்மா சதமடிக்க, மறுபுறம் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். இருவரும் இணைந்து 167 ரன்கள் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி 75 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ராகுல் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில், இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Trending Videos - 29 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 29, 2024