#BOOMINEWS | இது யாருடைய பணம் ? திறப்பு விழாவில் காங் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கலகல பேச்சு |

By : boominews

Published On: 2021-08-19

4 Views

03:03

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் கடியாபட்டி கிராமத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 5 அரை லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் சுப்புராம் தலைமை தாங்கினார் .வட்டார தலைவர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார். இதேபோன்று கே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கழனிவாசல் அரசுமேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 5 அரை லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் MP திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் சுப்புராம் தலைமை தாங்கினார் .வட்டார தலைவர் வீரப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அரிமளம் ஒன்றிய குழு தலைவர் மேகலா்முத்து,மாவட்ட கவுன்சிலர் கலைவாணி சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் தனலட்சுமி மெய்யப்பன் காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் இப்ராஹிம், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் செல்லையா ,புதுப்பட்டி கணேசன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் திறப்பு விழா நிகழ்ச்சியில், ஏதேனும் பிரச்சினை இருந்தால் அவர்களே சரிசெய்து கொள்வார்கள் என்று கலகலவென்று பேசினார். இந்நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

Trending Videos - 28 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 28, 2024