சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை சிறைப்பிடித்து விவசாயிகள் போராட்டம்

சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை சிறைப்பிடித்து விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட லாரிகளை, சிறைப்பிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது.br br திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த தத்தமஞ்சி, நெய்தவாயல் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில், விதிமுறைகளை மீறி, ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் மணல் அள்ளுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதுகுறித்து, வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரம் அடைந்த நெய்தவாயல் பகுதி விவசாயிகள், அவ்வழியாக மண் ஏற்றிவந்த 100- க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.


User: Sathiyam TV

Views: 0

Uploaded: 2018-07-17

Duration: 02:08