கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத கடைசி வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி – வெள்ளி காப்பில் நந்தி எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத கடைசி வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி – வெள்ளி காப்பில் நந்தி எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத கடைசி வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி – வெள்ளி காப்பில் நந்தி எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார் – சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றதுbr br கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத கடைசி வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. தமிழக அளவில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நடுவே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு விஷேச மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி காப்புகள் சார்த்தப்பட்டு, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு விஷேச சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டது. கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி, நாக ஆரத்தி, கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனைகள் காட்டப்பட்டது. முன்னதாக ஷோடஷ சம்ஹார நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து தீபாராதனையும் காட்டப்பட்டது. ஐப்பசி மாதம் என்றாலே பக்தி பெருங்கடலாக ஈஸ்வரன் ஆலயத்தில் குவியும் மக்கள் கூட்டம் மத்தியில்,. வளர்பிறை பிரதோஷம் மற்றும் ஐப்பசி மாத கடைசி பிரதோஷம் என்பதினால் ஆலயத்தில் பொதுமக்கள் ஏராளாமனோர் குவிந்து நந்தி எம்பெருமான் நடுவே ஈஸ்வரனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதிஸ்வரன் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.


User: templevision24

Views: 1

Uploaded: 2021-11-16

Duration: 08:41