திண்ணைப் பேச்சு வீரரிடம்- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திண்ணைப் பேச்சு வீரரிடம்- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தர்மமென்பார் நீதி என்பார்br தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்br தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுச் ;br தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்br வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்br கர்மவினை யென்பார் பிரமனெழுத் தென்பார்br கடவுள்மேல் குற்றமென்பார்br br இந்தத்- திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒருbr கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம்br ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சிbr எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்br இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍ (இந்த திண்ணை)br br பொதுநலம் பேசும் புண்யவான்களின்br போக்கினில் அனேக வித்தியாசம் ;br புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்br புவியை மயக்கும் வெளிவேஷம் -br அந்தப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்தbr நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் - (இந்த திண்ணை)br br கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்br கவைக்குதவாத வெறும் பேச்சுbr கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவேbr கருதவேண்டியதை மறந்தாச்சு - பழங்br கதைகளைப் பேசி காலம் வீணாச்சு ;br கையாலே முன்னேற்றம் கண்டாகணும் - (இந்த திண்ணை)br br நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்கbr நல்லவங்க கெட்டவங்க நம்பமுடியாதவங்கbr பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்கbr பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்கbr படிப்பவங்க வீடு புடிப்பவங்கbr பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்கbr இன்னும்- பொம்பளைங்க ஆம்பளைங்கbr அத்தனை பேரையும் வச்சுbr மாடா இழுக்கிறோம் வேகமாbr நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமாbr வண்டியை உருட்டி வறுமையை வெரட்டிbr உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் - (இந்த திண்ணை)


User: Simon vimal

Views: 13

Uploaded: 2012-06-22

Duration: 05:13