#karurboomi #கீழ்பவானி பாசன வாய்க்காலின் கடைமடை கரூருக்கு தண்ணீர் வேண்டும் விவசாயிகள் அதிரடி மனு |

By : karurboomi

Published On: 2022-04-25

3 Views

04:30

#karurboomi #newsonly #boominews #கீழ்பவானி பாசன வாய்க்காலின் கடைமடை பகுதியான கரூர் மாவட்ட எல்லைப் பகுதிக்கு பாசனத்திற்கு உரிய தண்ணீர் வழங்குவதற்கான அரசின் திட்டமான கால்வாய் சீரமைப்பு பணிகளை தொடங்கி நடத்த வேண்டும் என கோரி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்தில் அஞ்சல், மொஞ்சனூர் ஆகிய பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. இந்நிலையில், கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் வகையில் தமிழக அரசு 700 கோடி மதிப்பீட்டில் கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது எனும் கால்வாயை சிமெண்ட் தரைத் தளம் அமைக்க கூடாது எனவும் ஈரோடு மாவட்டத்தில் பல விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் எல்லையில் கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், கீழ்பவானி பாசன வாய்க்காலில் கடைமடை பகுதியில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது இந்த கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரும் என்பது நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு கால்வாயை சீரமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த கால்வாயை சீரமைத்த்தால் கடைமடை பகுதியான கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு சீரான தண்ணீர் கிடைக்கும். ஆனால் இதை சீர்குலைக்கும் வகையில் சில விவசாய சங்கங்கள் கால்வாய் சீரமைக்கும் பணியை மேற் கொள்ளக் கூடாது என கோரி வருகின்றன. தமிழக அரசு கடைமடை பகுதிக்கு முழுமையாக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கால்வாயை சீரமைத்து சிமெண்டு தரை தளம் அமைத்து கடைமடை பகுதிக்கு முறையான தண்ணீர் வழங்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

பேட்டி சண்முகராஜ் விவசாயி

Trending Videos - 29 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 29, 2024