தனித்திறமை l Kutty Story l Ep 2 l Motivation Story

By : NewsSense

Published On: 2021-12-27

28 Views

01:45

#kuttystory #newssense #tamilstories #motivation

ஒரு பெரிய காடு..அதுல எல்லா மிருகங்களும் சந்தோஷமா வாழ்ந்து வந்துச்சு ....ஒரு நாள் அந்த காட்டுல வாழக்கூடிய சிங்கத்துக்கு ரொம்ப தண்ணீர் தாகமா இருந்துச்சு ..அப்போ அங்க இருக்க ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கலாம்னு சிங்கம் போச்சு...உடனே அந்த குளத்தில் இருந்த எல்லா மீன்களும் பயந்து ஓடுச்சு ..ஒரு மீன் மட்டும் சிங்கத்து கிட்ட வந்து ...என்னால நீ இருக்க காட்டுக்குள்ள வர முடியல ..அதனால நாங்க இருக்க இடத்துக்கு நீயும் வரதானு ..நம்ம வடிவேல் சொல்ற மாதிரி சொல்லுச்சு ...இதை கேட்ட சிங்கத்துக்கு கோபம் வந்து அந்த மீன் கிட்ட ஒரு சவால் விட்டுச்சு ..அது என்னனா, அங்க தெரியுதே அந்த மரம்,அந்த மரத்தோட உச்சில நீ ஏறிட்டா இந்த காட்டுக்கு நீயே ராஜாவா இருந்துக்கோ ... நான் உன்ன எதுவும் பண்ணமாட்டேனு சொல்லுச்சாம் ...உடனே அந்த மீனும் ஏற முயற்சி பண்ணுச்சாம் ஆனா ,அந்த மீனால சுத்தமா முடியல ..உடனே அந்த மீன் தான் தோற்றுவிட்டதாக ஒப்புக்கொண்டு சிங்கத்திடம் மன்னிப்பு கேட்டுவிட்டு , சிங்கத்திற்கு ஒரு சவால் விடுச்சாம்...இந்த தண்ணீரில் நான் போகும் தூரம் வரைக்கும் நீயும் நீந்தி வந்துட்டா...இந்த குளத்தை விட்டு நான் போய் விடுகிறேன் என்று சொல்லுச்சாம் ... உடனே சிங்கமும் போட்டிக்கு தயாரானது...மீன் வேகமாக நீந்தி சென்று விட்டது ..அனால் , சிங்கம் என்ன தான் காட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் தண்ணீரில் ஒரு அளவுக்கு மேல் சிங்கத்தால் போக முடியவில்லை ... பிறகு சிங்கமும் தான் தோற்று விட்டதாக ஒப்புக்கொண்டு மீன் இடம் மன்னிப்பு கேட்டது...இந்த கதை மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான்...அந்த சிங்கத்தால் முடிந்தது மீனாள் செய்ய முடியவில்லை ...மீனாள் முடிந்தது சிங்கத்தால் செய்ய முடியவில்லை...காரணம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம்,தனித்திறமை இருக்கு ..அதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் செயல்பட்டால் ,என்றும் வெற்றியாளராக இருக்க முடியும் ... முதலில் உங்கள் தனி திறமையை நீங்கள் அடையாளம் காணுங்கள்

Trending Videos - 27 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 27, 2024